மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தொழில் சந்தை ஒன்று கூடல்
மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களம், அம்பாரை மாவட்ட செயலகம் மற்றும் நிந்நவூர் பிரதேச செயலகம் இணைந்து தொழிற் சந்தை ஒன்று கூடலை நேற்று முன்மன்தினம் நடாத்தியிருந்தது.
மாவட்ட இணைப்பாளர் ந. அருளானந்தம் ,நிந்தவூர் பிரதேச செயலக ம. வ. அ. உ ADS. நவுசியா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் நிந்தவூர் உதவி பிரதேச செயலாளர் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டலில் இடம் பெற்ற இந் நிகழ்வில் சுமார் 60க்கு மேற்பட்ட தொழில் தேடுனர்கள், 12 தொழில் வழங்கும் நிறுவனங்கள் என்பன கலந்து கொண்டன.






