திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின்
பணிப்புறக்கணிப்பு 15 நாள்களின் பின் கைவிடப்பட்டது

(கனகராசா சரவணன்)
திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் 15 நாள்களாக மேற்கொண்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நேற்று புதன்கிழமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் நேற்று மாலை 4 மணி தொடக்கம் அவசர சிகிச்சைப் பிரிவு செயற்படத் தொடங்கியுள்ளமையுடன் ஏனைய பிரிவுகள் இன்று வியாழக்கிழமை
வழமைக்கு திரும்பவுள்ளன என வைத்தியசாலைப் பணிப்பாளர்
தெரிவித்தார்.


கடந்த திங்கட்கிழமை 11 ஆம் திகதிதிருக்கோவில் மெதடிஸ்த மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு இடம் பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்கு பற்றிய திருக்கோவில் 3 ஆம் பிரிவுதுரையப்பா வீதியைச் சேர்ந்த 16
வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன் என்ற மாணவன் மயங்கிவீழந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்
கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தார்.


இச் சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின்
கவலையீனம் காரணமாகவே இந்தமாணவன் உயிரிழந்தார் எனக் குற்றம்
சாட்டு தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள்
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல்
நடாத்தியதில் கட்டடத்தின் பல ஜன்னல்கண்ணாடிகள் உடைந்து தேசமடைந்தன.

வைத்தியசாலை பெயர் பலகையையும் கூட்டத்தினர் உடைத்துச் சேதப்
படுத்தினர்.இதனையடுத்து வைத்தியசாலைவைத்தியர்கள் தமக்கு பாதுகாப்பு
இல்லை எனத் தெரிவித்து கடந்த 12ஆம் திகதி முதல் தொடர் பணிப்புறக்
கணிப்பில் ஈடுபட்டுவந்த நிலையில்அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நிந்தவூர், சம்மாந்துறை அக்கரைப்பற்று
வைத்தியசாவை வைத்தியர்களும் கவனவீர்ப்பாகப் பணிப் புறக்கணிப்பில்
ஈடுபட்டனர்.


இதனை தொடாந்து நேற்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றகலந்துரையாடலையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் தமது பணிப்புறக்கணிப்புப்
போராட்டத்தை நேற்றுடன் முடிவுக்குக்கொண்டுவந்தனர். நேற்று மாலை 4
மணி தொடக்கம் அவசர சிகிச்சைப்பிரிவு செயற்படத் தொடங்கியது.


ஏனைய பிரிவுகள் இன்று வியாழக்கிழமை தொடக்கம் வழமைக்கு திரும்பவுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர்தெரிவித்தார்.
இதேவேளை வைத்தியசாலைக்குக்கல்வீசி சேதம் விளைவித்தனர் என்று
கூறப்படும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது