Category: இலங்கை

ராஜபக்ச குடும்பத்தில் இருந்து பலர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதாக தகவல்!

ராஜபக்ச குடும்பத்தில் இருந்து பலர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதாக தகவல்! முன்னாள் ஆட்சியாளர்களான ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மட்டும் இலங்கையில்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் இனி எந்த எம். பி பதவியும் வகிக்கப்போவதில்லை என அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…

ஜனாதிபதி செயலகத்திலிருந்து விடை பெற்றார் ரணில்

புதிய ஜனாதிபதிக்கு இடம் கொடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செயலகத்திலிருந்து தனது உடைமைகளுடன் வெளியேறினார். ஜனாதிபதிக்குரித்தான அனைத்து வாகனங்களையும் கையளித்த நிலையில் அவர் தனது உத்தியோக இல்லத்துக்குச் சென்றார்.

ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளரின் அறிவிப்பு தாமதமாகலாம்

ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளரின் அறிவிப்பு தாமதமாகலாம். இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணையகம் ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கிடையில் விருப்பு வாக்கு எண்ணப்படுமென தோ்தல்…

23 ஆம் திகதி விசேஷட விடுமுறை

எதிர்வரும் 23 ஆம் திகதி (திங்கட்கிழமை) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவுக்குள் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கும்!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் முதல் முடிவுகள் இன்று நள்ளிரவுக்குள் வெளியாகும் என தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அஞ்சல் மூலமான வாக்குகளாகவோ அல்லது பதிவான வாக்குகளின் மூலமாகவோ முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பது வாக்கு எண்ணும்…

வாக்கெடுப்பு சுமுகமாக நிறைவு :பரவலாக சுமார் 70 வீதம் பதிவு

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 4 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய ரீதியில் 70 சதவீதத்ததுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில்…

வாக்க்குப்பதிவு விபரம் -2PM

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும். இதன்படி இன்று பிற்பகல் 02.00 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட…

பொது வேட்பாளர் பெயரில் நேற்று வெளியான துண்டுப்பிரசுரம் – மிகக் கேவலமான செயல் -பா. அரியநேத்திரன்

ஜனாதிபதித் தேர்தலுக்குச் சில மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனின் பெயரில் நேற்று வெள்ளிக்கிழமை (20.09.2024) இரவு துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அன்பார்ந்த தமிழ் வாக்காளப் பெருமக்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம். இம்மடல் மூலம் திறந்த…