இலங்கை தமிழரசு கட்சியின் 17 வது தேசிய மாநாடு திருகோணமலையில் ஆரம்பமாகியது.

இன்றைய மாநாட்டில் பொதுச் செயலாளர் மற்றும் துணைத் தலைவர்கள் உட்பட புதிய பொறுப்புக்கு உறுப்பினர்கள் தெரிவு இடம் பெற்றது


புதிய பதவிகளுக்கான பெயர் விபர முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கே பல குழப்பங்கள் நிலவிய நிலையில் புதிய பதவிகள் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டன.

இதுவரை குழப்பங்கள் தொடர்கிறது. அம்பாராய் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக சபையில் அறிவித்துள்ளார்.. மேலும் குழப்பங்களும் சர்ச்சைகளும் தொடர்ந்தவண்ணம் ம் உள்ளன

பொதுச் செயலாளர் குகதாசன்

சிரேஷ்ட உப தலைவர் சி வி கே சிவஞானம்

சிரேஷ்ட துணை செயலாளர் குணநாயகம்

இணை பொருளாளர்கள் ஞா.சிறிநேசன், கனகசபாபதி

துணைத் தலைவர்கள்

K. V.தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், அரியநேந்திரன், சத்தியலிங்கம்

இணை செயலாளர்கள்

திருமதி சாந்தி, சிறிஸ் கந்தராஜா, திருமதி ரஞ்சனி கனகராஜா, சரவணபவன், சாணக்கியன், சிவமோகன், குருகுலநாதன்

ஆகியோரும் 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்

.