கல்முனை பிரதேச மக்களின் நன்மதிப்புக்குரிய Dr. இரா. முரளீஸ்வரன் இப்பிரதேச மக்களுக்காக சேவையை ஆரம்பித்து இன்றுடன் ஒரு தசாப்தம் 07.12.2013 – 07.12.2023

கல்முனை பிரதேச மக்களின் இரண்டு கண்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையும்.
அம்பாறை மாவட்டத்தில் நூறு வருடங்களைக் கடந்த பழமை வாய்ந்த மூத்த வைத்திய சாலையாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை இருந்த போதும். கடந்த காலத்தில் பல்வேறு சூழ்ச்சிகள் சுயநல அரசியல் காய் நகர்த்தல்களால் வைத்தியசாலையின் அபிவிருத்திகள் பலவற்றுக்கு திட்டமிட்டு முட்டுக்கட்டைகள் போடப்பட்டிருந்த வரலாறுகள் யாவரும் அறிந்த உண்மை.

இருந்த வளங்களையும் இப்பிரதேச சில அரசியல்வாதிகள் பிடுங்கி எடுத்து தங்களுக்கு ஏற்றால் போல் பயன்படுத்த காய் நகர்த்திய கசப்பான உண்மைகளையும் யாரும் மறக்க முடியாது.

இவ்வாறு பல இன்னல்கள் குறைபாடுகளுக்கு மத்தியில் இயங்கிக் கொண்டிருந்த கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு நிர்வாகத் திறமை, பரந்துபட்ட சேவை மனப்பாங்கு, தூரநோக்கு சிந்தனை, பணிவு கனிவு எல்லாம் ஒருங்கே பெற்ற வைத்திய கலாநிதி இரா முரளீஸ்வரன் அவர்கள் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமை ஏற்று இன்று 10 வருடங்கள்.

இவரின் வருகைக்குப் பின்னர், இவரின் நிர்வாகத் திறமையாலும் வைத்தியசாலையின் சேவையின் நிமிர்த்தமும் சுகாதார அமைச்சர்களாக இருந்தவர்கள் உண்மையை அறிந்து சூழ்ச்சிகளை முறியடித்து வைத்தியசாலை நிர்வாகத்தின் சேவைக்காகவும், வைத்தியசாலை பணிப்பாளரின் அயராத முயற்சிகளின் பலனாக பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதுடன், பல அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
உதாரணமாக Icu unit, AAnd E , intern doctors cardiology unit, orthopedic unit, CT scan, stroke unit several ward’s quality awards என அடிகிக்கொண்டே செல்லலாம்.

சில சதிகார சமூக விரோதிகளின் வைத்தியசாலை்கெதிரான பலத்த சதிமுயற்சிகளுக்கு மத்தியிலும் சேவைக்கு சிறந்த சேவையிலும், நிருவாக கட்டமைப்பிலும் முன்மாதிரியாக திகழும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சியை Dr.இரா முரளீஸ்வரனுக்கு முன்பு Dr.இரா முரளீஸ்வரனுக்கு பின்பு என நாங்கள் பெருமையாக கூறுவதில் மகிழ்ச்சி அடைகின்றதுடன் கல்முனை பிரதேச மக்கள் சார்பாக கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

You missed