கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக பாரிசவாத தினநிகழ்வு

உலக பாரிசவாத தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் தலைமையிலும் வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர் Dr.M.N. M. சுவைப் மற்றும் பாரிசவாத பிரிவு உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஏற்பாட்டிலும் 2023.11.29 ஆம் திகதியன்று வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் முதல் நிகழ்வாக வரவேற்புரையினை திரு. G. சோளவேந்தன் (விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, பாரிசவாத பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர்) வழங்கினார். தொடர்ந்து Dr.M. A. A. சுஜா அவர்களினால் பாரிசவாத நோய் தொடர்பான விளக்கவுரை நடைபெற்றது. தொடர்ந்து வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் Dr. M. N. M. சுவைப் அவர்களினால் பாரிசவாத நோய் நிலைமை பற்றிய சிறப்புரை இடம்பெற்றது. தொடர்ந்து பாரிசவாத பிரிவு உத்தியோகத்தர்கள் ஊழியர்களினால் பாரிசவாத நோயில் இருந்து எம்மையும் எமது சமூகத்தினரையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட விழிப்புணர்வுடன் கூடிய நாடகமும் அரைங்கேற்றப்பட்டது.

நாடகத்தினை தொடர்ந்து பணிப்பாளரினால் தலைமையுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து திருமதி. K. மனோஜினி (நீரிழிவு முகாமைத்துவ தடுப்பு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர்) அவர்களினால் நன்றியுரை வழங்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சியினை திட்டமிடல் பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திரு. P.செல்வகுமார் தொகுத்து வழங்கியிருந்தார். மேலும் இந்நிகழ்வில் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் Dr. V. பிரேமினி, இதயவியல் நிபுணர் Dr. கசுன் துஷியந்த லொகுகெடகொட, தாதிய பரிபாலகர் திரு. N. சசிதரன், தாதிய பரிபாலகி திருமதி. L. சுஜேந்திரன், நிர்வாக உத்தியோகத்தர் திரு. T. தேவஅருள், வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.