கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து கதிர்காம யாத்திரிகர்களுக்கு இலவச வைத்திய முகாம் ஒன்றை ஏற்பாடு இன்று (29)செய்திருந்தனர்.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.சுகுணன் அவர்களின் ஒழுங்கமைப்பில் வைத்திய குழுவினரும், தமிழ் இளைஞர் சேனையின் தலைவர் அ. டிலாஞ்சன் தலைமையில் இளைஞர் சேனை உறுப்பினர்களும் சென்றிருந்தனர்.

யாத்திரிகர்கள் செல்லும் வழியான வண்ணாத்தி கணத்தடி எனும் இடத்தில் இன்று இந்த வைத்திய முகாம் பயனுள்ள வகையில் நடைபெற்றுள்ளதுடன் . யாத்திரிகர்கள் அதிகளவில் மருத்துவ சேவையை பெற்றிருந்தனர்.