பாண்டிருப்பில் வீடுகளில் நேற்று கொள்ளை!

பாண்டிருப்பு பிரதான வீதியிலும், புதிய சோமநாதர் வீதியிலும் அமைந்துள்ள மூன்று வீடுகளில் நேற்று நள்ளிரவு வேளையில் வீடுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த வீடுகளில் இருந்து தங்க நகைகள் பணங்கள் திருடர்களால் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்முனை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.