கதிர்காம பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை ஜூன் 12 இல் திறக்கப்படும்-ஆடிவேல் உற்சவம் ஜூன் 19 இல் ஆரம்பம்!

வரலாற்றுப் தொன்மைமிக்க கதிர்காம திருத்தலத்தின் வருடாந்த ஆடிவேல் திருவிழா தீர்த்தத்திற்கு செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி திறக்கப்ட்டு மீண்டும் ஜூன் 29 ஆம் திகதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (9) செவ்வாய்க்கிழமை கதிர்காமம் மொனராகலை அரசாங்க அதிபர் மற்றும் அம்பாறை அரசாங்க அதிபர் முன்னிலையில்
இடம் பெற்ற கூட்டத்தில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் மற்றும் காட்டுப் பாதை திறப்பு தொடர்பான கூட்டம் எதிர்வரும் 16ஆம் திகதி உகந்தை முருகனாலயத்தில் நடைபெறவிருக்கிறது.

கதிர்காம ஆடிவேல்
உற்சவம் ஜுன் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜுலை மாதம் 4 திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய உள்ளது .

உகந்தை மலை வருடாந்த ஆடிவேல்
உற்சவம் ஜுலை 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருக்கிறது.