அரசாங்கத்திற்கும் தொழிற்சங்க கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிந்துள்ளது.

சந்திப்பின்போது தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு கைவிடுவதற்கான உறுதியான தீர்வுகள் எதனையும் அரசாங்கத்தால் முன்வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளைய தினம் சகல மாகாணங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

You missed