வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காத நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (13.03.2023) நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டது.

இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் பிடியாணை பிறப்பித்துள்ளார்.