ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

தேசிய பொங்கல் விழா கொண்டாட்டம் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

பலாலி விமான நிலையத்தில் ரணில்

இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன் யாழ். பலாலி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அவர் நாகவிகாரைக்குச் சென்று பின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கவுள்ளதுடன், மதியம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, துர்க்கா தேவி மண்டபத்தில் 3 மணியளவில் நடைபெறும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.