அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மூன்று அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

மூன்று தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் நேற்று திடீரென குண்டுவெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டது.

இதனால் கட்டிடத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்த நிலையில், ஏராளமான செங்கற்கள் மற்றும் பிற சிமெண்ட் துண்டுகள் தெருவில் சிதறி விழுந்தன.

இது குறித்து, தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.