புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய புலம்பெயர் தொழிலாளர்கள் அனுமதிக்கும் சுற்றறிக்கையை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

இந்த நடவடிக்கையின் மூலம், 50 வீதம் அல்லது அதற்கும் குறைவான மின்சார வாகனத்தை இறக்குமதி செய்யும் உள்ளூர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது.

தேசிய கட்டத்தின் மூலம் மின்னேற்றம் செய்ய முடியாது

ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி 3,000 அமெரிக்க டொலருக்கு மேல் பணப்பரிமாற்றம் செய்திருந்தால், மின்சார மோட்டார் சைக்கிளை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.

இதற்கிடையில், 20,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் பணப்பரிமாற்றம் செய்தவர்கள், இலங்கைக்கு அனுப்பப்படும் தொகையில் பாதி விலையில், அதிகபட்சமாக 65,000 அமெரிக்க டொலர்கள் வரையிலான மின்சார காரை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

எவ்வாறாயினும், அவர்கள் இறக்குமதி செய்யும் வாகனத்தை மன்னேற்றம் செய்வதற்குத் தேவையான மின்சாரத்தை வழங்குவதற்கு ஒரு சூரிய சக்தி அமைப்பையும் வாங்க வேண்டும் அல்லது இறக்குமதி செய்ய வேண்டும்.

ஏனெனில் இந்த மின்சார வாகனங்கள் தேசிய கட்டத்தின் மூலம் மின்னேற்றம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இதேவேளை, இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக மோசடியான ஆவணங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு எச்சரித்துள்ளது.