பிரான்சின் எவியான்-லெ-பெய்ன்ஸ் நகரில் ஜி7 நாடாளுமன்றத் தலைவர்களின் உச்சிமாநாடு செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இந்த மாநாட்டில் அமெரிக்கா – ஈரான் இடையேயான புதிய அமைதி ஒப்பந்தம் மற்றும் ரஷ்யா – உக்ரைன் போர் ஆகிய விவகாரங்கள் முதன்மைப் பேசுபொருளாக உருவெடுத்துள்ளன.
மாநாட்டை நடத்தும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், மத்திய கிழக்கில் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள ஆரம்பகட்ட உடன்பாட்டை விரைந்து இறுதிசெய்ய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வலியுறுத்தியுள்ளார்.
