அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில்,பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் தலைமையிலான உயர்மட்டத் தூதுக்குழு ஈரான் சென்றுள்ளது.
அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட விசேட செய்தியை ஈரானிடம் கையளிக்கவும், இரு நாடுகளுக்கும் இடையிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைக்கவும் இந்த குழு ஈரான் சென்றுள்ளதாக ஈரான் நாட்டு ஊடகமான IRIB செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இரண்டாம் கட்ட நேரடிப் பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் நாட்களில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்துவதற்கான திட்டங்கள் குறித்து இந்த விஜயத்தின்போது ஆலோசிக்கப்படவுள்ளது.
