இன்றும், நாளையும் பல விமானங்களை நிறுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முடிவு!
மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ சூழ்நிலை காரணமாக இன்றும், நாளையும் இரவு 11.59 மணி வரை பல விமானங்களை நிறுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
கட்டுநாயக்காவிலிருந்து துபாய், ரியாத், தோஹா மற்றும் தம்மம் செல்லும் பல விமானங்களும் இதில் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தங்கள் விமானங்களின் நிலை குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவலுக்கு www.srilankan.com என்ற இணையதளத்தை பார்க்கலாம் என்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவிக்கின்றது.
மேலும், உதவி தேவைப்படும் பயணிகள் 1979 அல்லது 0094 11 777 1979 என்ற எண்ணையும் அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு, அருகிலுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் அல்லது டிக்கெட் வாங்கிய பயண முகவரைத் தொடர்பு கொள்ளவும் என்று அறிவுறுத்தியுள்ளது.

