வாகன போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்படும் அபராதங்களை, ஜனவரி 15 ஆம் திகதி முதல் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் இணைய வழியில் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Online GovPay முறையின் மூலம் செலுத்த முடியும் என, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலை பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், வாகன விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப்படும் சாரதிகள் இனி அபராதம் செலுத்துவதற்காக அலுவலகங்களுக்குச் சென்று நேரத்தை விரயமாக்க வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.