வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊற்றுச்சேனை மக்களுக்கு இ.கி.மிசன் உலருணவு விநியோகம்
( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சமகால பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டு.மாவட்டத்தின் ஊற்றுச்சேனையில் பாதிக்கப்பட்ட வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்தது.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் நேரில் சென்று நேற்று (1) திங்கட்கிழமை வழங்கி வைத்தார்.



