சர்வதேச சிறுவர் தினத்தினை கொண்டாடும் முகமாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை பணிப்பாளர்Dr.G. சுகுணன் அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் இடம் பெற்றன.
நேற்றைய தினம் வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறார்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கி மகிழ்விக்கப்பட்டனர். நிகழ்வின்போது வைத்தியசாலையின் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் Dr. ரொசாந்த், பிரதிப் பணிப்பாளர் Dr. தாஹிரா சபியுதீன் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்.











