மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபராகப் பணியாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான திருமதி ஜே. ஜே. முரளிதரன், 26.09.2025 முதல் பொது சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ளார்.
எனவே, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக தற்போது பணியாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான திரு. ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களை மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் அரசாங்க அதிபராக நியமிக்க பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
தற்போது கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக பணியாற்றும் அருள்ராஜா 01.09.2003ம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் இணைந்து கொண்ட இவர் 01.01.2024 அன்று விசேட தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டார்.
ஜெ.எஸ்.அருள்ராஜ், கிண்ணியா உதவி பிரதேச செயலாளர் திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலாளர் முன்னாள் திருமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் என பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.
தனது 50வது வயதில் மாவட்ட அரசாங்க அதிபராக நியமனம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.