பாறுக் ஷிஹான்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன் அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன் வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியலத்தின் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச். ரிஸ்பின் தலைமையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியலய பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கல்முனை மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து கல்முனை பொது சந்தை பகுதியில் சுகாதார பரிசோதனையை இன்று (05)மேற்க்கொண்டனர்.
இதன்போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற பழுதடைந்த மரக்கறி ,பழ வகைகள் உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு சுகாதார விதிமுறைகளை மீறிய சில விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் சுகாதார விதிமுறைகள்,உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தேவையான சுகாதார ஆலோசனைகள் அதிகாரிகளினால் வழங்கப்பட்டன.





