கதிர்காம யாத்திரிகர்களுக்கு மருத்துவ சங்கத்தினரின்
மருத்துவ சேவை ; கல்முனை ஆதார வைத்தியசாலையும் பணியில் இணைவு

கதிர்காம கந்தனின் அருள் வேண்டி,காட்டு வழியாக நடந்து, தங்களின் வேண்டுதலை நிறைவு செய்து கொள்ளும் பக்தர்களுக்காக, இந்து கலாச்சார அமைச்சின் அனுமதியில், நேற்று (20) அதிகாலை 5.30 மணியளவில் காட்டு வழிப்பாதை திறந்து வைக்கப்பட்டு, பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாத யாத்திரை பக்தர்களுக்கு அவசர மருத்துவ தேவைகளை வழங்கும் முகமாக,
சுகாதார அமைச்சின் அனுமதியில், அம்பாறை மாவட்ட பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் எல்லைக்குள் இயங்கும் லாகுகலை பிரிவு சுகாதார வைத்திய அதிகாரி அவர்களின் வழிகாட்டலின் கீழ், கல்முனை ஆதார வைத்திய சாலையின் பணி, நேற்றும் (20), இன்றும்(21) இடம் பெற அனுமதிக்கப்பட்டு
வைத்திய முகாம், கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது

மேலும் பல வருடங்களாக நடைபெற்று வரும் இச் சேவையை, பக்தர்கள் மனம் திறந்து வாழ்த்துவதும், ஒரு சிறந்த சேவையாக இதுவரை நடைபெற்று வந்துள்ளதுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதே வேளை தொடர்ந்து 06/07 நாட்களாக காட்டு வழியாக பயணிக்கும் முருக பக்தர்களின் சுகாதார தேவைகளுக்காக, கிழக்கு மாகாண சமூக வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி அழகையா லதாகரன் அவர்களின் தலைமையில் ஒரு வைத்தியப் பணியாளர்கள் குழு, நடுக்காட்டில் முகாமிட்டு, காட்டு வழிப்பாதை மூடும் வரை பக்தர்களின் அவசர வைத்திய சேவையை நிவர்த்தி செய்து வருகின்றனர்.


இச் சேவையை அழகையா லதாகரன்அவர்கள் வைத்திய சங்கத்தின் ஆதரவுடன் பல ஆண்டுகளாக நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மருத்துவ முகாமிற்கு உதவும் முகமாக ஒரு தொகை மருத்து பொருட்களை,
கல்முனை ஆதாரவைத்தியசாலையின் பணிப்பாளர் அவர்களின் பணிப்பில் வைத்தியசாலையின் பிரதம மருந்தாளர் பா.சுதர்ஜினி, சுகாதார அமைச்சின் நடைமுறைக்கு அமைப்பாக வழமைபோல் இவ்வருடமும் வழங்கி வைத்துள்ளமையும்  குறிப்பிடத்தக்கது..