போதுமான அளவுஎரிபொருள் இருப்பு உள்ளது – செயற்கை யாக எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் -எரிசக்தி அமைச்சு
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என போலி தகவலால்’ பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் (CPC) தற்போது அடுத்த இரண்டு மாதங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது என்றும், வரவிருக்கும் எரிபொருள் ஏற்றுமதிகளும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் எரிசக்தி அமைச்சு உறுதியளித்தது.
எனவே, எரிபொருள் பற்றாக்குறை என்ற போலி தகவலுக்கு ஏமாற வேண்டாம் என்று அமைச்சகம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.