டோஹா மீது தீப்பிழம்புகள், வெடிப்புச் சத்தங்கள்: கத்தார் வான் பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது
கத்தார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தீப்பிழம்புகள் தென்பட்டதுடன், பலத்த வெடிப்புச் சத்தங்களும் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வான் பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடா அல்லது ஏவுகணைகளா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக, கத்தாரில் உள்ள அமெரிக்க தளங்கள், குறிப்பாக அல் உதெய்ட் விமானத் தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணைகளை வீசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் இந்த பதிலடி அச்சுறுத்தல்களையடுத்து, கத்தார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது வான்பரப்பை தற்காலிகமாக மூடியிருந்தது.
நிலைமையை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர், மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி -ARVL
