ஜெயசிறிலை எதிர்க்கும் முஸ்லிம் கட்சிகள் : அதனால் ஜெயசிறிலுக்கு ஊரில் வலுக்கும் பேராதரவு.


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்தன் பின்னர் ஆட்சி அமைப்பது தவிசாளர் தேர்வு  என்பவவை  கட்சிகள் மட்டத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் இன்று மிகவும் அவதானிப்புடனும் பேசி பொருளாகவும்  காணப்படுகின்றது.

தேர்தல் முடிவின்படி  காரைதீவில்  தமிழரசுக் கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைக்கப்பெற்று இருந்தன. மக்கள் அதற்கான ஆணையை வழங்கி இருந்தார்கள். இந்நிலையில் தவிசாளர் தேர்வுக்கான விடயம் அண்மைய நாட்களாக  பொதுமக்களால் மிகவும் உன்னிப்பாக நோக்கப்பட்டு வரும் இந்த நிலையில். காரைதீவு  பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆகிய கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தவிசாளராக வருவதற்கு சில முஸ்லிம் கட்சிகள் தமது எதிர்ப்பை தமிழரசுக் கட்சியின் தலைமையிடம் தெரியப்படுத்தியுள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.


காரைதீவு  பிரதேச சபையில் தவிசாளராக இருந்து காரைதீவு மண்ணின்  இருப்பை பாதுகாக்க ஆளுமையுடன் செயல்பட்டவர் ஜெயசிறில் என்பதால் அவ்வாறான ஒருவர் மீண்டும் தவிசாளராக வருவதை இவர்கள் எதிர்ப்பதுக்கு காரணம் என காரைதீவு மக்களிடையே கருத்துக்கள் நிலவுகின்றன.


அத்துடன்  காரைதீவு  பிரதேச சபைக்கு  கிருஷ்ணபிள்ளை ஜெய சிறிலே  மீண்டும் தவிசாளராக வரவேண்டும் என்கின்ற ஆதரவு கோசம் வலுப்பெற்று வருவதனையும் அவதானிக்க முடிகிறது.


தமிழரசுக் கட்சிக்கு தங்களுடைய அமோக ஆதரவை வழங்கிய காரைதீவு பிரதேச மக்களின் இந்த கோரிக்கைக்கு  தமிழரசுக் கட்சியின் தலைமைகள் செவிசாய்க்க வேண்டும் என்பதும் பலரின் கோரிக்கையாக உள்ளன.


தமிழரசு கட்சியின் பிரதேச கிளை கூட்டத்திலும் தவிசாளராக ஜெயசிறில் தெரிவாக வேண்டும் என்கின்ற  கோரிக்கை பெரும்பான்மையானவர்களினால் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்