பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சாலே பெப்ரவரி 25, 2026 அன்று கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்கு வழங்கப்பட்ட அனுமதியின் பேரில் அவர் தற்போது 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில், இவ்விடயம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்திற்கு ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது.

