பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் 14 இல்.
( வி.ரி. சகாதேவராஜா)
நீதிமன்ற இணக்கத் தீர்மானத்தின்படி வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் திட்டமிட்டப்படி எதிர்வரும் 14 ஆம் தேதி சனிக்கிழமை நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 14 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு ஆலய வளாகத்தில் இப் பொதுக்கூட்டம் நடைபெறும் என திரௌபதி அம்மன் ஆலய மற்றும் மாணிக்கப் பிள்ளையார் ஆலய செயலாளர் மேற்படி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இதனையிட்டு நீதிமன்ற தீர்மானத்திற்கமைவாக பகிரங்கமாக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பொதுக் கூட்டத்திற்கு இரண்டு கிழமைகளுக்கு முன்னர் அது தொடர்பான அறிவிப்புகளை சகலருக்கும் வழங்க வேண்டும் எனவும்
கல்முனை மாவட்ட நீதிபதி ஏ எம் எம் றியாழ் இந்த இணக்கத் தீர்ப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


