நாளை (10) ஆனி பௌர்ணமி கலைவிழா கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில்! அனைவரும் வருக
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் ஆனி மாத பௌர்ணமி கலை விழா 10.06.2025 நாளை செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாண பணிப்பாளர் ச.நவநீதன் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதிகளாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் கு.சுகுணன் , சிரேஸ்ட எழுத்தாளர் உமா வரதராஜன் ஆகியோரும் ,கௌரவ அதிதிகளாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி என் ரமேஸ் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி என்.சிவரஞ்சித் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகளும், கௌரவிப்புக்களும் நடைபெறவுள்ள இந் நிகழ்வுக்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றீர்கள்.