முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் கடந்த 16ஆம் திகதி அமைச்சருக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து முன்னாள் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இன்று (19) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

இந்நிலையில் மஹிந்தானந்த அளுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.