Category: பிரதான செய்தி

அடுத்த பிரதம நீதியரசராக (Chief Justice) உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவின் பெயர் ஜனாதிப தியால் பரிந்துரை

அடுத்த பிரதம நீதியரசராக (Chief Justice) உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவின் பெயர் ஜனாதிப தியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசராக (Chief Justice) உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்த பரிந்துரையை…

அபிவிருத்திப்பணிகளை துரிதப்படுத்துமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவுறுத்தல்-23,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

அபிவிருத்தி திட்டங்களை விரைவாக செயற்படுத்துமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திநடவடிக்கைகளுக்காக 23,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகபிரதியமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார். மாகாண…

அரச அதிகாரிகளுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்

சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு இன்று(14) முதல் அபராதம் விதிக்கப்படும் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும்இ பல அதிகாரிகள் தங்களது சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், நாளைய(15) தினத்திற்குப் பின்னர் விபரங்களை சமர்ப்பிக்கும் அரச அதிகாரிகளிடம் அபராதம் விதிக்க…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – குறுகிய காலத்தில் நீதிமன்றத்துக்கு பல விடயங்கள் முன்வைக்கப்படும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்கூட்டியே நன்கு அறிந்துவைத்திருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை வௌிப்படுத்தினார். சிறையில்…

உலகப் புகழ்பெற்ற SpaceX ‘Starlink’ என்ற வேகமான இணைய சேவை இலங்கையில் ஆரம்பம்!

உலகப் புகழ்பெற்ற SpaceX ‘Starlink’ என்ற வேகமான இணைய சேவை இலங்கையில் ஆரம்பம் நிறுவனத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க், நேற்று (2) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வேகமான இணைய வசதிகளை வழங்குவதற்காக இந்த இணைய செயற்கைக்கோள் அமைப்பு 2019 ஆம் ஆண்டு உலகிற்கு…

இன்று(30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்!

இன்று(30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வெள்ளை டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, வெள்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை 274 ரூபாவிலிருந்து 289 ரூபாவாக…

செம்மணி – இன்று கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறுவன்/சிறுமியின் என்புத்தொகுதி; இந்த அரசிலாவது நீதி கிடைக்குமா?

இரண்டாம் கட்ட அகழ்வின் நான்காம் நாளான இன்று கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறுவன்/சிறுமியின் என்புத்தொகுதியும் அருகே கிடந்த பாடசாலைப் பையும் ! இன்னும் ஒரு சிதிலங்கள் நடுவே சில பிளாஸ்டிக் வளையல்கள்… இதையெல்லாம் பார்க்கும்போது ஏற்படும் மன உளைச்சலும் கோபமும்.. முறையான விஞ்ஞான…

தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே மக்களால் விரட்டியடிப்பு

நன்றி – தமிழ்வின் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்றையதினம் செம்மணியில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்றவேளை அங்கிருந்த போராட்டக்காரர்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்இ செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி அணையா விளக்கு போராட்டமானது…

ஒலுவில் பல்கலைக்கழக 22 மாணவர்கள் இடைநீக்கம்!

பகிடிவதை செய்த ஒலுவில் 22 மாணவர்கள் இடைநீக்கம் பாறுக் ஷிஹான் முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை…

கட்டார் வான் பரப்பு வழமைக்கு திருப்பியது

கட்டார் வான்வெளியில் வான் போக்குவரத்தை மீள ஆரம்பிப்பதாகவும் வளிமண்டலம் வழமைக்கு திரும்புவதாகவும் பொது சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. கத்தார் வான்வெளியில் விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டு, வளிமண்டலம் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக பொது சிவில் விமானப் போக்குவரத்து…