අයුක්තියට උදව් කරනවාද? අම්පාර දිස්ත්‍රික් කුලපති;
අරගලය දින 28ක් දිගටම!

அநீதிக்கு துணை போகும் ? அம்பாறை மாவட்ட அரச அதிபர்;
28 நாட்களாகவும் தொடரும் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராக
இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் இன்றும் 28 வது நாளாகவும் தொடர்கின்றது.

இன்றும் (21) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் வரும் கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் காலை முதல் கொழுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது வடக்கு பிரதேச முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த சிலர் கருத்து தெரிவிக்கையில் தாம் தொடர்ச்சியாக 28 வது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் இருந்தபோதிலும் இதனுடன் நேரடியாக தொடர்புபட்ட அம்பாறை மாவட்ட அரச அதிபர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை என்றும் தெரிவித்தனர்.

ஒரு சில அரசியல்வாதிகளும் அம்பாறை மாவட்ட அரசு அதிபருமே தங்களுடைய இன்றைய நிலைக்கு காரணம் என்றும் இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் வருகின்ற அரச காணிகளை கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் அளவை
செய்து கொண்டிருப்பதாகவும் இது போன்ற நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதோடு இவ்வாறான செயற்பாடுகளுக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துணை போவது ஒரு சமூகத்தின் மீது தனது பாரபட்சமான நிலைப்பாட்டை காட்டுவதாகவும் தெரிவித்தனர்.

1993 ஆம் ஆண்டு அமைச்சரவை பாத்திரத்தின் மூலம் அங்கீகாரம் அளிக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான முழுமையான அதிகாரங்கள் கிடைக்கப்பெறும் வரையும் வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தெற்கு பிரதேச செயலாளரின் அத்துமீறல்கள் நிறுத்தப்படும் வரையும் தமது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்திருந்தனர்.

கடந்த மார்ச் மாதம் 25 ம் திகதி முதல் இந்த போராட்டங்கள் இடம்பெற்று வருவதுடன்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குரிய நிதி செயற்பாடுகள் மற்றும் காணி அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து இப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.