மட்டு செங்கலடியில் இராஜாங்க அமைச்சரின் அதிகார துஸ்பிரயோகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருவர் சவப்பெட்டியுடன் சாகும்வரை உண்ணாவிரம்

((கனகராசா சரவணன்) 😉

இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரனின் அதிகார துஸ் பிரயோத்துக்கு ஆளாகாமல் செங்கலடி பிரதேச செயலாளர் சட்டப்படி தமது கடமையை புரியுமாறும்.  அமைச்சரை ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பதவியை பறிக்குமாறு கோரியும் கல் மண் கிறல் ஆகழ்வில் சட்டரீதியாக ஈடுபடுவரும்  இருவர் சவப்பெட்டியுடன்   மட்டு செங்கலடி பிரதேச செயலகத்திற்கு அருகில் சாகும்வரை உண்ணாவிரதே போரட்டம் ஒன்றை இன்று திங்கட்கிழமை (19) ஆரம்பித்துள்ளனர்.

கல், மண், கிறவல் என்பனவற்றுக்கு சட்டரீதியாக அனுமதி பெற்று அகழ்வில் ஈடுபட்டுவருபவர்களின் 2024 ஆண்டு அனுமதியை புதுப்பிக்க இராஜாங்க அமைச்சரின் சிபார்சு இருந்தால் மட்டும் புதுப்பிக்கமுடியும் என பிரதேச செயலாளர் அனுமதி பத்திரத்தை புதுப்பிக் மறுத்துவருகின்றதையடுத்து அராஜாங்க அமைச்சரின் அதிகார துஸ்பிரயோகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்

இது தொடர்பாக உண்ணாவிரத போரட்டத்தில் இருந்துவரும் இருவரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

செங்கலடி பிரதேசத்தில் கல், மண், கிறவல் என்பனவற்றுக்கு சட்டரீதியாக அனுமதி பெற்று பலர் அகழ்வு பணியில் ஈடுபட்டுவருகின்றனர் இந்த நிலையில் 2023 டிசம்பர் 31 ம் திகதியுடன் அனுமதிப்பத்திரம் காலவதியானதையடுத்து 2024 ம் ஆண்டு அதனை புதுப்பிப்பதற்கு  கல் மண் கிறவல் அகழ்வு பணியில் ஈடபட்டுவருபவர்கள் பிரதேச செயகத்திற்க சென்றால் பிpரதேச செயலாளர் அனுமதி பத்திரத்தை புதுப்பிக்க இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்  சிபார்சு வழங்கினால் மட்டும் அதனை புதுப்பித்து தரமுடியும்என புதுப்பிக்கக மறுப்பு தெரிவித்துவருகின்றார்.

இதனையடுத்து மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து பல பிரச்சனைகளை முன்வைத்தோம் அவர் அந்த கடிதத்தை பிரதேச செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார் ஆனால் இதுவரை பதில் எதுவும் இல்லை

எனவே நாங்கள் புதிதாக ஒன்றும் கேட்கவில்லை ஏற்கனவே கல் மண் கிறவல்  அகழ்வதற்கு அது சார்ந்த திணைக்களங்கள் பரிசோதனை செய்து அதற்கான அனுமதியை வழங்கி நாங்கள் அகழ்வு பணியினை மேற்கொண்டுவருகின்றோம்

ஒவ்வொரு கல்குவாரியிலும் 10 க்கு மேற்படவர்கள் வேலை செய்கின்றனர். இவ்வாறு 300 க்கு மேற்பட்டவர்கள் வேலை செய்துவருகின்றனர் இவர்களது வாழ்வாதாரமே இது தான்  இந்த நிலையில் நாங்கள ஏற்கனவே  வழங்கிய அனுமதியை புதுப்பித்து தருமாறு முறைப்படி விண்ணப்பித்தோம் ஆனால் எங்களுக்கு சட்டபடி ஆவணங்கள் இருந்தும் வியாழேந்திரன் சிபாரிசு செய்யும் நபர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்க முடியும் என பிரதேச செயலாளர் தெரிவித்து அனுமதியை புதுப்பிக்கது மறுத்துவருகின்றார்.

இராஜாங்க அமைச்சரை தனிப்பட்ட முறையில் சந்தித்தால் தான் மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றால் இதில் யார் அதிகாரிகள்? அரசியல் ரீதியாகவா அல்லது பேரம் பேசுவதற்கா ? அமைச்சரை சந்திக்க வேண்டும் எனவே இவ்வளவு காலமும் அனுமதிபத்திரம் வழங்க அரசியல் இருந்ததே இல்லை இந்த முறைதான் அனுமதி பத்திரங்களை புதுப்பிப்பதில் அரசியல் வாதிகள் சம்மந்தப்பட்டுள்ளனர் எங்கள் பிரதேசத்தில் அபிவிருத்திக்குழு என்ற அதிகாரத்தை வைத்துக் கொண்டு அவருக்கு ஏற்றமாதிரி அதிகாரிகளை துஸ்பிரயோம் செய்து வருகின்றார்

எனவே இந்த அதிகார துஸ்பிரயோகத்திற்கு முற்றுபள்ளி வைக்க வேண்டும் அரச சேவை அரச அரச சேவையாக இயங்கவேண்டும் என்பதற்காக தீர்வு எட்டும்வரை சாகும்வரை ஒண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்து இருந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.