உலகத் தமிழ் பல்கலைக்கழகமும் 12 சர்வதேச நாடுகளும் இணைந்து சமூக சேவைக்காக வழங்கிய கலாநிதி பட்டம் பெற்ற காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சமூக சேவையாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு தனது சொந்த ஊரான கரைதீவில் முதலாவது வரவேற்பு நிகழ்வு இன்று (12)காரைதீவில் இடம் பெற்றது.

கரைதீவு விக்னேஷ்வரா வித்தியாலய அதிபர்,ஆசிரியர் மாணவர்களினால் வரவேற்பு விழா சிறப்பாக இடம் பெற்றது.

இந்த விழா பாடசாலையின் அதிபர் பாலேந்திரா தலைமையிலே இடம் பெற்ற இந் நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கொரோனா காலகட்டத்திலும் வெள்ளம் ஏற்பட்ட காலகட்டத்திலும் அவரின் அளப்பெரிய சேவைகளை நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் நினைவூட்டினர்.

தொடர்ச்சியாக சமூக சேவை செய்து வருகின்ற ஜெயசிறிலுக்கான பொருத்தமான சமூகசேவைக்கான கலாநிதி பட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தவிசாளர் கலாநிதி கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தான் வறுமையின் காரணமாகவே சமூக சேவை செய்து வந்தேன்.கல்வி கற்கும் காலத்தில் பல சிக்கல்களை எதிர்கொண்டதால் வறுமையான மக்களுக்கும் கல்வியில் பின்தங்கிய பிரதேசங்களுக்கும் துயரதுன்பங்களோடு இருக்கின்ற மாணவர்களுக்கும் இந்த உதவியை செய்ய முடிந்தது என கூறினார்.

ஒவ்வொருவருடைய சமூக சேவைக்கும் பின்னால் பல வறுமையும் பல கஷ்டங்களும் இருந்திருக்கும் என்றே அவர் உரைத்திருந்தார். அதே போன்று சமூக சேவைக்கான கலாநிதி பட்டம் எனக்கானது அல்ல எனது மாவட்டத்தில் என்னைப்போல் செயற்படுகின்ற சமூக சேவையாளர் முத்தமிழ் வித்தகர் உலகதமிழ் பேராசிரியர் விபுலாநந்தர் அவர்களுடைய தூரநோக்கும் இதுவாகும் சமூக சேவை செய்கின்றவர்களுக்குரிய அங்கீகாரமே இங்கு வழங்கப்படிருக்கின்றது.இந்த கலாநிதி பட்டத்தை உலக தமிழ் பல்கலைக்கழகமும் 12 சர்வதேச நாடுகளும் இணைந்து வழங்கியிருந்தாலும் இது சமூக சேவை செய்கின்ற அனைவருக்கும் இது பொருந்தமாகும் என்றார்.