தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணமலை பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக இன்று சம்பூரில் (06.01.2024) ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெற்றது.

ஜல்லிக்கட்டுடன் தொடங்கிய இந்த பொங்கல் நிகழ்வானது இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த ஜல்லிக்கட்டு நிகழ்வில் 200 காளை மாடுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீ முருகனும் சிறப்பு விருந்தினராக இலங்கை பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தென்னிந்திய நடிகர் நந்தாவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://fb.watch/po__aMsSjC/?mibextid=Nif5oz