மட்டக்களப்பிலும் பொலிஸ் பதிவு மீண்டும் ஆரம்பம்

(கனகராசா சரவணன்) 

மட்டக்களப்பில் பொலிசார் மீண்டும் குடியிருப்பாளர்களின் விபரங்களை கோரிய விண்ணப்பபடிவம் ஒன்றை வீடு வீடாக வழங்கி தகவல் சேகரித்து வருகின்றனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திலுள்ள பிரதேசங்களில் உள்ள வீடு வீடாக பொலிசார் முழுவிபரங்களும் அடங்கிய விண்ணப்பபடிவம் ஒன்றை வழங்கி தகவல்களை பெறும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்

பொலிஸ் பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் தங்கியிருப்பவர்களின் விபரங்களை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பபடிவம் 1865 ஆம் ஆண்டின் 16 ம் இலக்க பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் 75 வது பிரிவிற்கு அமைவாக செயல்படும் ஆணை எனும் தலைப்பில் விண்ணப்பபடிவம் ஒன்றை வழங்கி பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.