காயத்திரி ஸ்டோர்ஸ் அனுசரனையில் பாண்டிருப்பு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு!

பாண்டிருப்பு காயத்திரி ஸ்டோர்ஸ் அனுசரனையில் 2022 க.பொ.த (சா/தர) பரீட்சையில் சித்தி பெற்ற பாண்டிருப்பு மகாவித்தியாலய மாணவர்கள் பாராட்டி கௌரவித்து பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இன்று (11.12.2023 – திங்கள்) பாடசாலை அதிபர் திரு.T.வில்வராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக .P.குணராசா (உரிமையாளர் – காயத்திரி ஸ்டோர்ஸ், பாண்டிருப்பு) கலந்து சிறப்பித்ததோடு, க.பொ.த (சா/தர) பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களையும், பாடசாலை மாணவர்களுக்கு தேவையான ஒரு தொகுதி பயிற்சிக் கொப்பிகளையும் அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.

பாடசாலையின் வளர்ச்சிக்காக பல வழிகளிலும் உதவி வழங்கிக் கொண்டிருக்கும் .P.குணராசா அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றியும் தெரிவிக்கப்பட்டது.