கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பல்வேறு வழிகளில் உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பினால் (International Medical Health Organization) மீண்டும் நன்கொடையாக வைத்தியசாலையின் நோயாளிகளுக்கும், நோயாளிகளின் உதவியாளர்களுக்காகவும் 250 பிளாஸ்ரிக் கதிரைகள் மற்றும் 300 தலையணைகள் என்பன வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி இரா. முரளீஸ்வரன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் வழங்கி வைக்கப்பட்டன.

அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான .L.பிரதீப்காந்தினால் 2023.11.27 ஆம் திகதியன்று வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. மேலும் இந்த நன்கொடை கையளிக்கும் நிகழ்வில் வைத்தியசாலை நீரிழிவு முகாமைத்துவ வைத்தியர் Dr. K. ரிஷிகேஸ், தாதிய பரிபாலகர் . N. சசிதரன், நிர்வாக உத்தியோகத்தர் . T.தேவஅருள், திருமதி. K. மனோஜினி (நீரிழிவு முகாமைத்துவ தடுப்பு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.