காணிக்கு குருநாதன்” நிகழ்வை தமிழ் அதிகாரிகள் புறக்கணிக்க வேண்டும் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி அம்பாறை அமைப்பாளர் துஷானந்தன்

கல்முனைத் தமிழர்களுடைய தலைமகனாக விளங்கக்கூடிய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய பிரதேச செயலாளர் T. j அதிசயராஜ் அவர்களை இந்த நிகழ்வுக்கு அழைப்பு விடாமல் புறக்கணித்தமையானது ஒட்டுமொத்த கல்முனை தமிழர்களையும் அவமதிக்கும் ஓர் செயலாகவும் இனவாதிகளின் மற்றும் ஒரு திட்டமாகவும் பார்க்கத் தோன்றுகின்றது.

குறித்த இந்த நிகழ்விற்கு வெகு தூரத்தில் இருக்கும் ஏனைய பிரதேச செயலாளர்களுக்கு எல்லாம் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது ஆனால் கல்முனையில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு பிரதேச செயலகத்தினுடைய பிரதேச செயலாளருக்கு அழைப்பு விடுக்காமையானது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

தமிழர்கள் மத்தியில் வடக்கு பிரதேச செயலகம் என்ற ஒன்று இங்கு இல்லை எனும் மாயையை வெளி உலகிற்கு காட்டுவதற்காகவே திட்டமிட்ட ரீதியில் தெற்கு பிரதேச செயலாளர் மாத்திரம் அழைக்கப்பட்டிருக்கின்றார் ஆகவே இந்த நிகழ்வினை கண்டித்து குருநாதன் ஐயா மற்றும் எமது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அத்தோடு ஏனைய தமிழ் பிரதேச செயலகத்தினுடைய பிரதேச செயலாளர்களும் இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த கல்முனைத் தமிழர்களுடைய சார்பாக மிகவும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்டம் அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் தெரிவித்தார்.