விமானநிலையத்தில் பஹ்ரைனுக்கு செல்ல இருந்த ஒருவர் கைதுப்பாகியுடன் கைது !!

(கனகராசா சரவணன்;)

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைனுக்கு விமானமூலம் செல்லவதற்கு விமான நிலையத்தில் கைதுப்பாக்கியுடன் கம்பளையைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் 2.15 மணிக்கு கைது செய்துள்ளதாக விமான நிலைய பொலிசார் தெரிவித்தனர்

கம்பளையைச் சோந்த குறித்த நபர் சம்பதினமான இன்று பஹ்ரைனுக்கு பகல் 2.15 செல்லவுள்ள விமாத்தில் செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு சென்று அங்கு விமான நிலைய முதல் சோதனைச் சாவடியில் அவரின் பையை விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஸ்கானிங் செய்யபோது பையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த கைதுப்பாகி ஒன்றை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த நபரை கைது செய்ததுடன் கைதுப்பாக்கியை மீட்டுள்ளனர்

இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிசார் தெரிவித்தனர்  

 இது தொடர்பான மேலதிக விசாரணை கட்டுநாயக்க பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்