சகல அரச நிறுவனங்களினதும் கொடுப்பனவுகள் மற்றும் அறவீடுகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துமாறு ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் ஜுலை மாதத்திலிருந்து சகல அரச நிறுவனங்களுக்கும் இது பற்றிய ஆலோசனை வழிகாட்டல் வழங்கப்படும்.