தமிழ்க் கட்சிகள் பேச்சு நடத்தினால் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக ஆழமாக ஆராய்ந்த பின்னர் முடிவு!


‘வடக்கு, கிழக்கில் இணைந்து சபைகளை நிறுவுவது குறித்து தமிழ்க் கட்சிகள் உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தலையும் அரசுக்கு வழங்க
வில்லை. தமிழ்க் கட்சிகள் எம்முடன் பேச்சு நடத்தினால் ஆழமாக ஆராய்ந்த பின்னரே எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படும்.’

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்
ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


‘ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி சபைத் தேர்தல்
என்பன ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவையாகும். இந்த மூன்று தேர்தல்களிலும்
மக்களின் நடத்தை வேறுபட்டதாகவேகாணப்படும். அந்தந்தத் தேர்தல்களுடனேயே ஒப்பீடுகள் மேற்கொள்ளப்படவேண்டும். அவ்வாறு நாடாளுமன்றத்
தேர்தலுடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒப்பிட்டு பார்ப்பதாயின் கடந்த
தேர்தலில் 32 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொண்ட சஜித் பிரேமதாஸ இம்முறை 21 சதவீத வாக்குகளையே பெற்றிருக்கின்றார். என்றார்.