தேர்தல் நடவடிக்கைகளுக்கு போதியளவு உதவிகளை வழங்குமாறு கோரி மத்திய வங்கி ஆளுநருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

எரிபொருள் மற்றும் மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு தேவையான பணத்தை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சி ஹேவா கோரிக்கை விடுத்துள்ளார்.

உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், இதுதொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.