2022 ஆம் ஆண்டுக்கு அமைவாக இவ்வருடம் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்கான மதிப்பீட்டு பரிசோதகரின் விண்ணப்பங்களை மீளப் பெறுவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வியாழக்கிழமை(12.01.2023) முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அது நாளையுடன் (15.01.2022) முடிவடைவதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்களை அனுப்ப மறுப்பு

எனினும் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதும், தங்களுக்கு வழங்க வேண்டிய விடைத்தாள் மதிப்பீட்டுக் கட்டணம் முறையாக செலுத்தப்படவில்லை என எதிர்ப்பு தெரிவித்து மதிப்பீட்டு ஆய்வாளர்கள் விண்ணப்பங்களை அனுப்ப மறுத்துள்ளனர்.