தெல்தெனிய பிரதேசத்தில் காணாமல் போன 15 வயது சிறுமியை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சிறுமி கெங்கல்ல, அம்பகோட்டே பகுதியைச் சேர்ந்தவர் எனவும், இவர் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த திகதியில் அந்த சிறுமி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பாததையடுத்து தெல்தெனிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி தனது தோழியுடன் பாடசாலைக்கு செல்வதாக தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலாக கண்டியில் இருந்து கொழும்புக்கு புகையிரதத்தில் பயணித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கிடைக்காததால், அவளை கண்டுபிடிக்க போலீசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தெல்தெனிய பொலிஸாரை 081- 2374073 அல்லது 071- 8591066 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.