2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கான கால வரையறையை அறிவிப்பது கடினம் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

பலதரப்பு கடன் வழங்குநர்களின் காலக்கெடு நிச்சயமற்றதாகவே உள்ளதாகவும், அது எப்போது கிடைக்கும் என்பது அவர்களுடன் இடம்பெறும் கலந்துரையாடலில் தங்கியுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினருடனான கலந்துரையாடலின் பின்னரே அது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு தலைவர் Peter Breuer மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் Masahiro Nozaki ஆகியோர் ஜப்பானின் Nikkei Asia இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளனர்.