சுகிர்தகுமார்

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் நடாத்தும் அம்பாரை மாவட்ட தொழிற்சந்தை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் 2022.9.13 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற உள்ளது.

இத்தொழிற்சந்தையில் தனியார் துறையில் காணப்படும் உள்நாட்டு தொழில் வாய்ப்புக்கள் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கள் சுய தொழில் ஊக்குவிப்பு வாய்ப்புக்கள் தொழில் பயிற்சி வழிகாட்டல்கள் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளன. தொழிலற்ற இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொழில் நிலையம்அம்பாரை