ஜனவரி 25 ஆம் திகதிக்குப் பின்னர், ராஜபக்ஷக்களை விரட்டியடிப்பதற்கான வாய்ப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கும் என புதிய சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்தார்.
அதுவரையில் அவசரப்படாமல் மெதுவாகச் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்துக்கு வருவதற்கான டிக்கெட்டை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவே எனக்கு வழங்கினார். அதுபோல புதியக் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவும் சஜித் எனக்கு அனுமதி வழங்கியிருக்கிறார் எனவும் தெரிவித்தார்.
நாட்டுக்கு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்த குமார வெல்கம, மீண்டும் அரசியலுக்கு வர வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2022/09/download-3-4.jpeg)