காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை கைது செய்வதையும் ஒடுக்குவதையும் நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) இன்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளுடன் பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தை கையளிப்பதாக உறுதியளித்த போதிலும், போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதலை கட்டவிழ்த்து விடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆயுதப்படைகளை பெற்றுக்கொண்டார்.

போராட்டத்தின் காரணத்தை அரசாங்கம் உணரவில்லை
ரணிலை ஜனாதிபதி ஆக்குவதற்கு வாக்களித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை திருப்திப்படுத்தவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குப் பிறகும், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இன்றைய தினம் கட்நாயக்கா விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய அதிகாரிகளினால் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு இளைஞர் வெளிநாடு செல்ல சென்ற போது பலவந்தமாக கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.