(கனகராசா சரவணன்)

அம்பாறை பொத்துவிலில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (23) காலை 11 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர் பொத்துவில் லகுகலையைச் சேர்ந்தவும் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் 51 வயதுடைய திசாநாயக்கா என்பவரே இல்லாறு உயிரிழந்துள்ளார்.

பொத்துவில் கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னாள் பெற்றோலை பெறுவதற்காக சம்பவதினமான இன்ற காலையில் இருந்து காத்திருந்த ஒருவர் திடீரென மயக்கமுற்று கீழே வீழ்ந்து மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் ஏற்கனவே இருதய சத்திர சிகிச்சை மோற்கொண்டவர் எனவும் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொத்துவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.